தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர்
In இந்தியா February 18, 2021 1:04 pm GMT 0 Comments 1177 by : Jeyachandran Vithushan

கொரோனா தடுப்பூசியை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் தெரிவு செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவேக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.
இந்த 2 தடுப்பூசிகளில் எது வேண்டுமானாலும் விருப்பத்துக்கு ஏற்ப பயனாளிகள் தெரிவு செய்து கொள்ளலாம் என கூறிய அவர், சென்னையில் கோவேக்சின் தடுப்பூசிகளை அதிகமானோர் விரும்பி போடுவதாக கூறினார்.
இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 6 ஆக இருந்த கோவேக்சின் தடுப்பூசி நிலையங்கள் 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 மாவட்டங்களில் கோவேக்சின் தடுப்பூசி மையங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.