News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  1. முகப்பு
  2. இலங்கை
  3. தமிழர்களின் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை!

தமிழர்களின் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை!

In இலங்கை     October 21, 2018 3:53 pm GMT     0 Comments     1547     by : Ravivarman

தமிழர்களின் தாயகப்பகுதிகளில் நில அபகரிப்பைத் தடுக்கத் தவறினால் செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் சூழல் அரசியலும் நில அபகரிப்பும் என்ற கருப்பொருளில் உரையரங்கு ஒன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றை எம்மீது தொடுத்திருக்கிறது. வனங்களைப் பாதுகாத்தல், வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல் என்று சொல்லி ஏராளமாக எமது நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது.

இந்த நிலஅபகரிப்பைத் தடுக்கத் தவறினால் அமெரிக்காவில் அதன் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களுக்கு ஏற்பட்ட கதியே விரைவில் எமக்கும் ஏற்படும்.

அரசின் இந்த நிலக் கையகப்படுத்தல்கள் எல்லாம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுகின்ற பசுமை நடவடிக்கைகளாகவே உலகத்தின் கண்களுக்குத் தெரியும்.

ஆனால், அவை பச்சை முகமூடி அணிந்துகொண்டு அரசு தந்திரமாக எம் மீது தொடுத்திருக்கின்ற ஒரு பச்சை யுத்தம். இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள எமது நிலங்களை விடுவிக்கக்கோரி நாங்கள் நடத்துகின்ற போராட்டங்களின் நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளும்.

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இந்த நிலங்களை அரசாங்கம் விடுவிக்கவும் நேரும். இதனால்தான் எவரும் ஆட்சேபிக்காத இயற்கைப் பாதுகாப்பு என்ற போர்வையில் இப்படி ஒரு நிலஆக்கிரமிப்பை அரசு மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நாட்டில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை இலங்கை அரசு ஏற்க வேண்டும் – எஸ்.சிறிதரன்  

    யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்களை மறந்து மன்னிப்பதற்கு முன்னர், இந்நாட்டில் இடம்பெற்றது இனப்படுகொல

  • இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: வாசுதேவ நாணயக்கார  

    இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்படும், போர்க்குற்றச்சாட்டுக்களை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவத

  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா  

    போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டா

  • குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!  

    மீள்குடியமர்த்தப்பட்ட இரணைதீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற

  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!  

    கரையோரப் பாதுகாப்பு மற்றும் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலொன்றினை ஜப்பான் இலங்கைக


#Tags

  • பொ. ஐங்கரநேசன்
  • யுத்தம்
    பிந்திய செய்திகள்
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • 424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
    424 நிறுவனங்களுக்கு இராணுவத் தளபாடங்கள் தயாரிக்க இந்தியா அனுமதி
  • இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
    இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் நாளை!
  • சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
    சர்வதேச முதலீடுகளுக்கு மஹிந்தவே காரணம் – மஹிந்தானந்த
  • நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
    நாயாகரா உள்ளிட்ட பகுதிகளுக்கு உறை பனி எச்சரிக்கை!
  • கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
    கட்சி விலகுவதற்கான உறுப்பினர்களின் முடிவு வேதனையளிக்கிறது: மே
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.