தலைமன்னாரில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது
தலைமன்னாரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தற்போது அவரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தலைமன்னார் பங்குத்தந்தையை சந்திக்க வேண்டுமென கூறி அவர் நேற்று (திங்கட்கிழமை) சென்றபோது, பிரதேச மக்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளனர். எனினும், தன்னிடம் அடையாள அட்டை இல்லையென குறிப்பிட்டதால் அவரை பொலிஸாரிடம் பிரதேச மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.