திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை – ஆயுதங்களுடன் அறுவர் கைது
In இலங்கை May 2, 2019 6:36 am GMT 0 Comments 2359 by : Dhackshala
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலதரப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வாள்கள், துப்பாக்கி ரவைகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இதுவரை அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜமாலியா மற்றும் மட்கோ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.