News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த
  • தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்!
  • மோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி
  • துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!
  • தமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்!
  1. முகப்பு
  2. இலங்கை
  3. திலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

திலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு!

In இலங்கை     September 13, 2018 9:51 am GMT     0 Comments     1956     by : Litharsan

தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்குமான அழைப்பை இக்கட்சி அறிக்கையூடாக விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச்சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூகவிடுதலையினை நேசித்தவர் திலீபன். அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து நல்லூர் வீதியில் மூச்சடங்கிப்போனவர் தியாகி திலீபன்.

இற்றைவரை திலீபனின் ஒற்றைக்கோரிக்கை கூட நிறைவேறாதநிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவுநாட்கள் நடைபெறும் இக்காலங்களில் உறவுகள் கேளிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளைச்சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டிநிற்கின்றோம்.

தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • முன்னாள் போராளிகளின் நிலை குறித்து சுவிஸ் முக்கிய பேச்சு!  

    முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, சமூக, பொருளாதார செயற்பாடுகள் குறித்து, ஜனநாயக போராளிகள் கட்சியினருக

  • முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் ஜனநாயக அச்சுறுத்தல்: ஜனநாயக போராளிகள் கட்சி  

    தொடர்ச்சியாக முன்னாள் போராளிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவது ஓர் ஜனநாயக அச்சுறுத்தலாகும் என ஜனநாயக போர

  • கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு!  

    கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்

  • யாழ்.சென்ற தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி!  

    யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில

  • ஈழ வரலாற்றில் மறக்க முடியாத நாள்: முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு!  

    முதல் பெண் மாவீரர் மாலதியின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் ஜனநாயக போராளிகள் கட்சியினரினால் மிக உணர்வுபூர்வ


#Tags

  • Thileepan's Memorial
  • Thiyagi Thileepan
  • ஜனநாயக போராளிகள் கட்சி
  • தியாகி திலீபனின் நினைவுதினம்
  • தியாகி திலீபன்
    பிந்திய செய்திகள்
  • எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
    எட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்!
  • விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
    விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு!
  • தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
    தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்!
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
    ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்:  விஜித ஹேரத்
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.