தி.மு.க கௌரவர்கள் சபை: ஜெயக்குமார் விமர்சனம்

தி.மு.க.ஒரு கௌரவர்கள் சபையென்றும், கருணாநிதியை திருதராஷ்டிரன் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த கௌரவர்கள் சபையில் திருதராஷ்டிரன் மறைவிற்கு பின்னர் தற்போது துரியோதனனுக்கும் துச்சாதனனுக்குமிடையே போட்டி நிலவுவதாகவும் கூறினார்.
இங்கு கலைஞர் கருணாநிதியை திருதராஷ்டிரன் என்றும், ஸ்டாலின் மற்றும் அழகிரியை துரியோதனன்- துச்சாதனன் என்றும் ஜெயக்குமார் மறைமுகமாக சாடியுள்ளார்.
மேலும் கூறிய அவர், இந்த கௌரவர்கள் சபையே மேசாமானது. எனவே இங்கு அவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டிற்கு கேடுதான் என மேலும் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.