தீவிரவாதிகளின் எறிகுண்டு தாக்குதலில் 7 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய எறிகுண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் பேருந்து நிலையம் அருகே, பாதுகாப்பு படையினரை நோக்கி, எறிகுண்டை வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எறிகுண்டு குறி தவறி சந்தைப் பகுதியில் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்மந்தப்பட்டு பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.