News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ‘ஒருபோதும் மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப்
  • சதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு
  • பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்
  1. முகப்பு
  2. இப்படியும் நடக்கிறது
  3. துணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்!

துணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்!

In இப்படியும் நடக்கிறது     October 15, 2018 7:51 pm GMT     0 Comments     1439     by : Litharsan

தமிழ்நாட்டின் சென்னை நகரில் கள்ளநோட்டுக்கள் அடித்து நூதனமான முறையில் விநியோகம் செய்துள்ள இரு பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கள்ளநோட்டுக்களை கடையொன்றில் விநியோகம் செய்ய முற்பட்டவேளை சந்தேகப்பட்ட வியாபாரி பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கவே குறித்த பெண்கள் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டனர்.

இதன்போது அச்சடிக்கப்பட்ட 36 அயிரம் ரூபாய் பெறுமதியாக கள்ளநோட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் தெரிவயருவதாவது, தமிழ்நாட்டின், சென்னை அமைந்தகரையிலுள்ள ரெயில்வே காலனி விதியில் மருந்து கடை ஒன்றில் பெண்ணொருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார்.

அது கள்ளநோட்டு போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த குறித்த வர்த்தகர், தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், அந்த பெண்ணிடம் இருந்த பையை சோதனை செய்தனர்.

அதில் ரூ.36 ஆயிரம் பெறுமதியான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, கொளத்தூரைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவர் தனக்கு இந்த கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சத்யலட்சுமி என்ற பெண்ணும் இவரும் சேர்ந்து சென்னை அண்ணாநகரில் தெரு ஓரத்தில் உணவுக்கடை நடத்தி வந்தனர். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே என்ன செய்யலாம் என யோசித்தபோது, “யூ டியூப்பில்” கள்ளநோட்டுகள் அச்சடிப்பது எப்படி? என்ற வீடியோவை பார்த்தனர்.

அதன்படி ரூ.2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடிப்பது எப்படி? என்று பார்த்துவிட்டு அதன்படியே கொளத்தூரில் உள்ள சத்யலட்சுமி வீட்டில் வைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளை பிரதியெடுத்து கள்ளநோட்டுகளை தயாரித்தனர்.

அத்துடன் அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு இடங்களில் உள்ள கடைகளுக்கு சென்று அவசரமாக பொருட்கள் வாங்குவது போல் நடித்து, புழக்கத்தில் விட்டுள்ளனர். அத்துடன் கட்சி பிரமுகர் ஒருவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் சத்யலட்சுமி வீட்டில் இருந்து கள்ளநோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், பணம் நகல் எடுக்கப் பயன்படுத்திய கடதாசிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.

இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட கட்சிப் பிரமுகரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்ரீதேவியின் நினைவுநாள் திதி வழங்கும் நிகழ்வில் அஜித்-ஷாலினி பங்கேற்பு  

    மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் ஒருவருட நினைவு நாளையொட்டி, சென்னையில் அவரின் நினைவுநாள் திதி இன்று வ

  • தமிழக மக்களின் தேவைகள் குறித்து அ.தி.மு.க. அதீத கரிசனை கொண்டுள்ளது – தம்பிதுரை  

    தமிழக மக்களின் தேவைகள் குறித்து அ.தி.மு.க. அதீத கரிசனை கொண்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

  • விஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு  

    அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடப்ப

  • வங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  

    வங்கக்கடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில்

  • ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு  

    ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி’, ‘செக்க சிவந்த வானம்’ ஆகிய திரைப்படங்கள் நல்ல


#Tags

  • Chennai
  • fake money
  • Womens Arrested
  • கள்ளநோட்டு
  • சென்னை
  • பெண்கள் கைது
    பிந்திய செய்திகள்
  • அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
    அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய லசித் அம்புல்தெனிய
  • பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
    பொதுக்கழிப்பறையில் படமாக்கப்பட்ட கபிலவஸ்து திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
  • ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
    ஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்
  • காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
    காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
  • பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
    பயிற்சியாளர் மாணவனுக்கு கன்னத்தில் அறைந்த விவகாரம் – மஹேல கண்டனம்!
  • பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    பிக் பஷ் ரி-20 தொடர்: மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
  • மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
    மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
  • மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
    மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க
  • பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
    பிரெக்ஸிற் காலக்கெடு நீடிக்கப்படுவது சாத்தியம்: ஐரிஷ் பிரதமர்
  • யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
    யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.