துருக்கிக்கு போர் விமானங்களை வழங்கும் செயற்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா!

துருக்கிக்கு போர் விமானங்களை வழங்கும் செயற்பாட்டை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
ரஷ்யாவுடனான துருக்கியின் தற்காப்பு ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு மத்தியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துருக்கிக்கான பயிற்சி உபகரணங்கள் மற்றும், எஃப்-35 போர் விமானங்களின் ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால், ரஷ்யாவிடம் ஏவுகணைகளை கொள்வனவு செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், எச்சரிக்கையை மீறி துருக்கி ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.