News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • அமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு!
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச நியமனம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச நியமனம்!

In இந்தியா     September 27, 2018 9:05 am GMT     0 Comments     1555     by : Kemasiya

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, அரச நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை), முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக கடந்த மே மாதம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அத்தோடு,  உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரச நியமனம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களுக்கான பதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. எனினும் பாதிக்கப்பட்டவர்களில் 10 குடும்பத்தினருக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனைய மூன்று குடும்பத்திலும் ஒரு குடும்பத்தினர் தமக்கு இந்த வாய்ப்பு தேவையில்லை எனக் கூறிவிட்டனர்.

மற்றைய இரு குடும்பத்திலும் உள்ள பிள்ளைகள் 18 வயதை கடக்காத நிலையில், அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர்.

குறித்த ஆலையினால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலைமை ஏற்படுவதாகவும், குடிக்கும் நிலத்தடி நீர் மாசடைவதாகவும் அம்மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, பொலிஸார் முன்னெடுத்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரிவிட்ட நிலையில், ஆலை மூடப்பட்டது.

எவ்வாறாயினும் ஆலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பது தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆயினும் குறித்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் கண்டறியும் பொருட்டு, சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்  

    ஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார். சென

  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்  

    ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்

  • ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு எட்ட முடியும் – திருமாவளவன்  

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உச்ச நீதிமன

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது! – உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)  

    ஸ்டெர்லைட் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தர

  • பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை  

    பட்டாசு ஆலைகளை திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது என அமைச்சர் ராஜ


#Tags

  • எடப்பாடி பழனிச்சாமி
  • தமிழகம்
  • தூத்துக்குடி
  • ஸ்டெர்லைட்
    பிந்திய செய்திகள்
  • பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்
  • ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
    ஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
  • லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
    லைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு
  • நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
    நாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்
  • பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
    பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்
  • பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
    பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
  • கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
    கல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !
  • காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
    காலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
  • நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
    நீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்
  • நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
    நீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.