தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இவ்வாறு தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சுத்தம் செய்வதற்கு பொது மக்களை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
தென் மேற்கு பருவக்காற்று மழை ஆரம்பிப்பதை தொடர்ந்து டெங்கு நுளம்புகள் பெருக் கூடிய இடங்கள் பல காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
முப்படையினர் பொலிஸார் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒன்றிணைந்து நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.