நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா
In இலங்கை December 17, 2020 4:51 am GMT 0 Comments 1429 by : Yuganthini

வியட்நாம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரும், சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) அவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பன்னிபிட்டி மற்றும் பெலவத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்கள் இருவரும் கடந்த 4 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்காக சிலாபம் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்ற நிலையிலேயே, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.