நாடு முடக்கப்படுமா? – ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி சிறப்பு கலந்துரையாடல்
In இலங்கை December 22, 2020 7:54 am GMT 0 Comments 2015 by : Dhackshala

நாட்டில் தனிமைப்படுத்தப்படாத பகுதியில் அடுத்த சில நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளோ விதிக்க எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நாட்டின் நிலைமையை நிர்வகிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுடன், இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட கலந்துரையாடல் நடைபெறும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
பிரித்தானியாவில் அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளின் நிலைமை குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சுகாதார அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை மேலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.