நாட்டில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் அதிகமானோர் பதுளையில் பதிவு
In இலங்கை February 7, 2021 5:28 am GMT 0 Comments 1359 by : Dhackshala

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 726 கொவிட்-19 நோயாளர்களுள் அதிகமானோர் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் 197 கொவிட் நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 116 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 101 பேரும் ஏனைய 312 நோயாளர்கள் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.