நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
In ஆசிரியர் தெரிவு December 25, 2020 7:32 am GMT 0 Comments 1593 by : Dhackshala

மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி மாத்தறை – திக்வெல்ல – யோனக்கபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியலாங்களில் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 7 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.