இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது
In இலங்கை January 4, 2021 12:31 pm GMT 0 Comments 1533 by : Jeyachandran Vithushan

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) மேலும் 277 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது
நாட்டில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இலங்கையில் மேலும் 565 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 817 ஆக காணப்படுகின்றது.
தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 934 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 436 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.