நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
In இலங்கை December 22, 2020 12:55 pm GMT 0 Comments 1532 by : Jeyachandran Vithushan

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 891ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 618 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இதில் 8 ஆயிரத்து 410 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 442 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 181பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.