நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று: 847 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 428 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 74 ஆயிரத்து 484ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 847 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 831 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 269 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன், இலங்கையில் இதுவரை 384 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.