நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில், 551 பேர் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 81 பேரும் சிறைச்சாலைகக் கொத்தணியி்ல உள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்தைக் கடந்து 32 ஆயிரத்து ஏழாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 473 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 22 ஆயிரத்து 831 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 556 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 147 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.