நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு – பொலிஸ்
In இலங்கை December 1, 2020 5:30 am GMT 0 Comments 1454 by : Jeyachandran Vithushan

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நேற்று மட்டும் இடம்பெற்ற 6 வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.