நாட்டுக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகள் அவசியம்!
In இங்கிலாந்து February 9, 2021 9:36 am GMT 0 Comments 1534 by : Anojkiyan

பிரித்தானியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் தனிமைப்படுத்தும்போது இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டும்.
அனைத்து வருகையாளர்களும் தங்களது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் இரண்டு மற்றும் எட்டாவது நாட்களில் ஒரு சோதனை பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை மேலும் பாதுகாப்பு அளிக்கும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. புதிய தொற்றுகளை மிகவும் திறம்பட கண்காணிக்க அதிகாரிகளுக்கு இது உதவுகிறது.
தற்போதைய விதிகளுக்கு மேலதிகமாக, பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள், படகு, ரயில் அல்லது விமானம் மூலமாக இருந்தாலும், எதிர்மறை கொவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இந்த சோதனை பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.