நாட்டை விட்டு செல்லும் முன்னர் நிதி அமைச்சரை சந்தித்தேன்: விஜய் மல்லையா
In இந்தியா September 12, 2018 2:20 pm GMT 0 Comments 1341 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்ததாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணைக்காக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அவர் முன்னிலையாகியிருந்தார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், ஆனால் அந்த விவரங்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விஜய் மல்லையா தம்மை சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை சந்திக்க ஒரு போதும் தாம் நேரம் ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.