News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • நிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
  • பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்!
  • இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!
  • இந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை
  • மழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி!

நான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்!

மூன்று தசாப்தகால யுத்தம் ஏற்படுத்திச் சென்ற அழிவுகளை வாயால் வர்ணிக்க முடியாது. யுத்தம் ஏற்படுத்திய வடுக்களில் இருந்து தங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஈழத் தமிழினம் இன்றுவரை போராடிக் கொண்டுதான் இருக்கின்றது. கடின உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடுகளாய் கொண்டு அவர்கள் முயன்று கொண்டிருகின்றார்கள்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர் உறவுகளின் உரிமைமிகு ஆதரவுக் கரங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகள் போன்றன, வாழத் துடிக்கும் ஈழத் தமிழினத்திற்கு ஆறுதலாய் – ஆதரவாய் இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால், கிடைக்கின்ற உதவிகளும் ஆதரவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரியமுறையில் பகிரப்படுகின்றனவா என்றால், சிறிது சிந்திக்கத்தான் வேண்டும்.

வடக்கு கிழக்கின் பல்வேறு கிராமங்கள் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாத வலிகளோடு உளன்று கொண்டிருக்கின்றன. நவீன உலகத்தோடு ஒப்பிடுகின்றபோது சுமார் 4 தசாப்தங்களுக்கு பின்தங்கிய வாழ்வை இம்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான ஒரு பிரதேசம் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் (11.03.2019) கவனஞ்செலுத்துகின்றது.

யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்குண்ட பிரதேசங்களில் அம்பாறை மாவட்டம் விதிவிலக்காக அமையவில்லை. உறவுகளை பறிகொடுத்து, வாழ்வதற்கு ஏதுமற்ற நிலையில் குடிசைகளில் இன்று தமது வாழ்க்கையை கழித்துக்கொண்டிருக்கின்றனர்.

இம்மக்களை, பிரித்தானியாவை சேர்ந்த சமூக சேவகரான டொக்டர் ஜயேந்திரன் நமசிவாயம் அண்மையில் நேரில் சென்று, அவர்களின் நிலையை கேட்டறிந்தார்.

இவ்வாறு எத்தனையோ கிராமங்கள் வெளியாரின் பார்வையில் இருந்து மறைந்து நிற்கின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஒரு பொதுவான நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக வாழ்வை தொலைத்தவர்கள் அனைவரும் மீட்டெடுக்கப்பட வேண்டியவர்களே. அனைத்து திட்டங்களும் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டெடுக்கும் வகையில் திட்டமிட்ட பொறிமுறையூடாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதே அவதானத்தின் வேண்டுகோளாய் இருக்கின்றது.

சம்பந்தப்பட்டவர்கள் இதனை கவனத்தில் கொள்வார்களாக…!

0 Shares
  • Facebook
  • Twitter

 

Related Videos

ஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்

தமிழ் மக்களை பாதுகாக்க கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் கையில் இருக்க வேண்டும்- கருணா

கல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக கலந்துரையாடல்

கடலரிப்பால் அபாயத்தை எதிர்கொண்டுள்ள அம்பாறை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேகநபர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த மாலைதீவுப் பிரஜை கைது

கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு

வரலாற்று தவறுகளை தமிழ் மக்கள் மீண்டும் செய்யக்கூடாது- கருணா

அக்கறைப்பற்றில் கத்திவெட்டு காயங்களுடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு

அம்பாறையில் வெள்ளம் காரணமாக விவசாயம் பாதிப்பு!

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூரல்


  • 1
  • …
  • 13
  • >
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.