நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
In இந்தியா April 22, 2019 1:23 am GMT 0 Comments 2234 by : adminsrilanka

அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழிமை) ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் எதிர்வரும் 29ம் திகதியாகும். மே மாதம் 2ம் திகதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அதேநுரம், மே 19ம் திகதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ம் திகதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் திகதி நடைபெற்றது.
ஏதிர்வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.