நாளைய தினம் தீர்மானமிக்கது என்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
In இலங்கை December 30, 2020 9:24 am GMT 0 Comments 2159 by : Dhackshala

பண்டிகை நிகழ்வுகளை நாளைய தினம் (வியாழக்கிழமை) குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளைய தினம் தீர்மானம் மிக்கதாகும் என கூறிய அவர், குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கோரியுள்ளார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் கொழும்பிலிருந்து வௌியேறும் பேருந்துகளில் நாளை மீண்டும் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.