நெதர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 696பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில் இதுவரை 12ஆயிரத்து 868பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 9பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 690பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.