News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா சென்னை விஜயம்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை : இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம்: ஷிகர் தவான்

நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம்: ஷிகர் தவான்

In கிாிக்கட்     February 14, 2019 6:48 am GMT     0 Comments     1337     by : Anojkiyan

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் நானும், ரோஹித் சர்மாவும் நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உலகக்கிண்ண தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஆண்டு எனக்கு சிறப்பாக இருந்தது. சர்வதேச ரி-20 போட்டிகளின் அதிக ஓட்டங்கள் எடுத்தேன். ஒரு சில ஏமாற்றங்கள் இருந்தாலும் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன். ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரையில் நீண்ட ஆண்டுக்குப் பின் எங்கள் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளேன். 21 வயதில் இங்கிருந்து சென்று 33 வயதில் மீண்டும் இணைந்துள்ளேன். இடைப்பட்ட காலத்தில் அதிக பாடம் கற்றேன். இந்த அனுபவத்துடன் டெல்லி அணியில் களமிறங்குகிறேன்.

சுப்பர் ஜோடி இந்திய அணியில் நானும், ரோஹித் சர்மாவும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறோம். இதற்கு முக்கிய காரணம் டோனி. இவ்விடயத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். தற்போது இருவரும் சீரான ஓட்ட குவிப்பை வெளிப்படுத்தி, உலகின் சிறந்த ஆரம்ப ஜோடி வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி தருகிறது.

தற்போது சிரேஷ்ட வீரர் என்பதால் எங்களுக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும், எப்போது ‘ரிஸ்க்’ எடுப்பது, எப்படி அதை தவிர்ப்பது என எல்லாம் அத்துபடி. ரோஹித் சர்மா 201 போட்டிகள், நான் 123 போட்டிகள் விளையாடி விட்டோம். இதனால் நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம். பொறுமையாக செயல்பட்டு நேரம் வரும் வரை காத்திருந்து ஓட்டங்;கள் சேர்க்க முயற்சிப்போம்.

தற்போது உலகக்கிண்ண தொடருக்கு தயாராகி வருகிறேன். அடுத்து வரும் ஐந்து வார காலம் கூடுதலான பயிற்சியில் ஈடுபடப் போகிறேன். இதனால் புத்துணர்ச்சியுடன் களமிறங்க முடியும். ‘மினி’ உலகக் கிண்ணம் என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண தொடரை இதற்கு முன் இங்கிலாந்தில் வென்றுள்ளோம். இதுபோல இம்முறையும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான எங்கள் பாதையில் தவறுகள் செய்யாமல் பார்த்துக் கொள்வோம்” என கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான களமிறங்கி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC  

    இலங்கை அணியின் இளம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித த

  • ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு – மீண்டும் அணிக்குள் அகில தனஞ்சய!  

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டு

  • டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!  

    சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள, டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் முறையாக

  • ‘சிக்ஸர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!  

    விண்டிஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு

  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!  

    தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான குசல் ஜனித் பெரேரா, டெஸ்



உங்கள் கருத்துக்கள்Cancel

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன

    பிந்திய செய்திகள்
  • அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
    அரசியல் ரீதியாக தீவிர மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் – ரவி
  • 2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
    2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு
  • உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
    உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திக் கொள்ளை – இரு இளைஞர்கள் கைது!
  • மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
    மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான இருநாள் கருத்தரங்கு
  • அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
    அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப் பாணியில் எந்தவித தவறும் இல்லை – ICC
  • உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
    உடன்பாடற்ற பிரெக்ஸிற் மடமைத்தனமான செயலாக அமையும்: கொவேனி
  • ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
    ‘கனா’ நாயகனுடன் இணையும் பிரபல நடிகரின் மகள்
  • புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
    புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெருமகிழ்ச்சி – தூத்துக்குடி ஆட்சியர்
  • சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
    சவுதி இளவரசருக்கு பாகிஸ்தானின் உயரிய விருது!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.