நேற்று அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான விபரம் !
In இலங்கை November 25, 2020 3:54 am GMT 0 Comments 1412 by : Jeyachandran Vithushan

இலங்கையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 259 பேர் அதாவது அதிகளவிலானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 78 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தைத் சேர்ந்த 23 பேரும் கண்டியைச் சேர்ந்த 16 பேரும் அதில் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு 19 பொலிஸ் அதிகாரிகளுக்கும் 17 விசேட அதிரடி படையினருக்கும் 24 கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலி நுவரெலியா மாவட்டத்தில் தலா 04 பேரும் யாழ்ப்பாணம், இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் மாத்தறையில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 14 ஆயிரத்து 962 பேர் குணமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 911பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 94 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.