நேற்று மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுப்பு
In இலங்கை December 26, 2020 8:07 am GMT 0 Comments 1335 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, 13 ஆயிரத்து 516 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 11 இலட்சத்து 81 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.