பஞ்சாப் அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஐ.பி.எல். 12 ஆவது தொடரின் 32ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதுகின்றன.
மொகாலியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் பஞ்சாப் அணி 183 ஓட்டங்களை ராஜஸ்தான் அணியின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பாக, லோகேஷ் ராகுல் 52 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 40 ஓட்டங்களையும், கிரிஷ் கெய்ல் 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக, ஜொப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணி 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.