படப்பிடிப்பில் உயிரிழந்த நடனக் கலைஞரின் குடும்பத்திற்கு ‘தல’ அஜித் நிதியுதவி!
In சினிமா November 7, 2018 12:25 pm GMT 0 Comments 1466 by : Ravivarman

விஸ்வாசம் படப்பிடிப்பில் நடனக் கலைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கான உதவிகளை நடிகர் அஜித் செய்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களில் கூட்டு சேர்ந்தனர். தற்போது விஸ்வாசம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பின் போது, அஜித் உடன் நடனம் ஆடிய நடனக் குழுவில் ஒருவரான 42 வயதான சரவணனுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் நடிகர் அஜித் நிதியுதவி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.