பந்து வீச்சில் மாறுபாடுகள் அவசியம்: ஜெய்தேவ் உனட்கட்

ரி-ருவென்ரி போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு பந்துவீச்சில் மாறுபாடுகள் முக்கியம் என இந்திய கிரிக்கட் வீரர் ஜெய்தேவ் உனட்கட் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்றுவரும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் இலங்கை அணியுடனான அடுத்த போட்டியில் துடுப்பாட்ட வீரர்களை ஏமாற்ற முயற்சிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக்கிண்ண கிரிக்கட் தொடரின் நான்காவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ஜெய்தேவ், ‘மாறுபாடுகள் விளையாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருப்பதாக தெரிவிக்கும் ஜெய்தேவ் அதனை பயன்படுத்தி முன்னோக்கி நகர்வேன் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.