பனாமாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பனாமாவில் இரண்டு இலட்சத்து மூவாயிரத்து 295பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் பனாமாவில் இதுவரை வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 481பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 348பேர் பாதிக்கப்பட்டதோடு 42பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 31ஆயிரத்து 576பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 183பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 68ஆயிரத்து 238பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.