பள்ளிவாயில்களில் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகளுக்கு தடை!

பள்ளிவாயில்களில் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி எம்.ஆர்.எம். மலிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகும் புனித ரமழான் நோன்பு தினத்தை முன்னிட்டே பள்ளிவாயில்களில் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பள்ளிவாயில்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.