பா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன – திருமாவளவன்
In இந்தியா April 25, 2019 6:17 am GMT 0 Comments 2046 by : Krushnamoorthy Dushanthini
பா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக அரசியலில் இருந்து விலக தயார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பொன்பரப்பி பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.கவிடம் இருந்து அப்பாவி இந்துக்களை காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டியதுடன், அங்கு மறுவாக்கு நடத்தப்பட வேண்டும்.
நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு சார்பாக செயற்படுகிறது. எனது தேவை உழைக்கும் மக்களின் பாதுகாப்பை தவிற வேறு ஒன்றும் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.