பா.ஜ.க.ஆட்சியின் தோல்வியைதான் விவசாயிகளின் தொடர் போராட்டம் வெளிப்படுத்துகிறது- கே.எஸ்.அழகிரி
In இந்தியா February 21, 2021 11:17 am GMT 0 Comments 1171 by : Yuganthini

விவசாயிகளின் தொடர் போராட்டம், பா.ஜ.க.ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி உரையாற்றியதாவது, “மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டொலர் என்ற போதிலும் 71 ரூபாய்க்கு பெற்றோல் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது 54 டொலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெற்றோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
விவசாயிகளின் தொடர் போராட்டம், பா.ஜ.க.ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட அடிக்கல்லையே காணவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.