பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை, ஜே.பி.நட்டா தனது ருவிற்றர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளதுடன், கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, சோதனை செய்து கொண்ட நிலையில் தனக்கு தொற்று உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு நட்டா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.