பின்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40ஆயிரம் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 100ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில், இதுவரை மொத்தமாக 50ஆயிரத்து 662பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 716பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 342பேர் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பதாயிரத்து 946பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.