பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக வைரஸ் தொற்றினால், 60ஆயிரத்து 229பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை வைரஸ் தொற்றினால் 24இலட்சத்து 42ஆயிரத்து 990பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 15ஆயிரத்து 674பேர் பாதிக்கப்பட்டதோடு, 374பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 20ஆயிரத்து 105பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 773பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் ஒரு இலட்சத்து 82ஆயிரத்து 656பேர் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.