பிரான்ஸில் சிறைக்காவலர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
In ஐரோப்பா January 22, 2018 8:23 am GMT 0 Comments 1556 by : Suganthini

பிரான்ஸில் சிறைச்சாலைக் காவலர்கள், கைதிகளினால் தொடர்ச்சியாகத் தாக்குதல்களுக்கு உள்ளாகுவதைக் கண்டித்து, நாடளாவிய ரீதியிலுள்ள சிறைக்காவலர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரான்ஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் கடமையாற்றிவந்த சிறைக்காவலர்கள் இருவர் நேற்று தாக்குதலுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தம்மீதான தாக்குதல்களைக் கண்டித்து சிறைக்காவலர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சிறைக்காவலர்களின் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக, சிறைச்சாலை தொழிற்சங்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிந்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் முன்வைத்த முன்மொழிவை சிறைச்சாலை தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது.
இக்குழப்பத்துக்கு மத்தியில் சிறைக்காவலர்களின் பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்வதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.
இதேவேளை, சிறைக்காவலர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் தொழிற்சங்கத் தலைவரை சந்திக்கவுள்ளதாக, பிரான்ஸ நீதியமைச்சர் நிக்கோல் பெல்லோபேட் (Nicole Belloubet) தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.