பிரான்ஸில் தீவிரமெடுக்கும் கொவிட்-19: உணவகங்கள்- மதுபானக் கூடங்கள் திட்டமிடப்படி திறக்கப்படாது!

பிரான்ஸில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் எதுவும் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்படாது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் அதிக அளவு தொற்றுநோய்கள் மற்றும் கொரோனா வைரஸின் அதிக தொற்று புதிய வகைகளின் ஆபத்து காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ‘நிலைமை இயல்பு நிலைக்கு திரும்புவதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. மாசுபாட்டின் அளவு அதிகமாக உள்ளது மற்றும் டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து தொற்று அதிகரித்து வருகிறது’ என கூறினார்.
ஒரு நாளைக்கு சராசரியாக 15,000 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன. டிசம்பர் தொடக்கத்தில் 10,000 பதிவாகியுள்ளன.
இரண்டு தீவிர சிகிச்சை படுக்கைகளில் ஒன்று கொவிட்-19 நோயாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது மற்றும் மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இன்னும் ஒத்திவைக்கப்படுகின்றன.
மதுபானக் கூடங்கள் மற்றும் உணவகங்கள் ஜனவரி 20ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று நம்பியிருந்தநிலையில், தற்போது பெப்ரவரி மாத நடுப்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.