பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 58,784பேர் பாதிப்பு- 407பேர் உயிரிழப்பு!
In இங்கிலாந்து January 5, 2021 5:37 am GMT 0 Comments 1732 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 58ஆயிரத்து 784பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 407பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 27இலட்சத்து 13ஆயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 75ஆயிரத்து 431பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 847பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.