பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
In ஆசிரியர் தெரிவு April 16, 2019 3:20 am GMT 0 Comments 2411 by : Yuganthini
லூட்டன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் குறித்த நான்கு இலங்கையர்களையும் அண்மையில் பிரித்தானியப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து பெட்ஃபேர்ட்ஷையர் பொலிஸ்நிலையத்தின் தடுப்புக்காவலில் வைத்து அவர்களிடம் தொடர் விசாரணையை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை, நான்கு இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நான்கு இலங்கையர்களும், பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோருவதற்காக வந்தவர்கள் என தி மோனிங் ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள