பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
In இங்கிலாந்து December 29, 2020 5:17 am GMT 0 Comments 1779 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து 385பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 357பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பிரித்தானியாவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 23இலட்சத்து 29ஆயிரத்து 730பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 71ஆயிரத்து 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 529பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.