News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  1. முகப்பு
  2. இங்கிலாந்து
  3. பிரித்தானிய இராணுவ வீரர் துருக்கியில் கைது! – உதவி கோரி தாய்நாட்டிற்கு கடிதம்

பிரித்தானிய இராணுவ வீரர் துருக்கியில் கைது! – உதவி கோரி தாய்நாட்டிற்கு கடிதம்

In இங்கிலாந்து     September 17, 2018 10:51 am GMT     0 Comments     1700     by : Farwin Hanaa

துர்கிஸ்தான் நாட்டுப் பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ வீரர், பிரித்தானிய அரசாங்கத்திடம் உதவிகோரியுள்ளார்.

துர்கிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இணைந்துகொண்டு சிரியாவில் தாக்குதல் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டி பிரித்தானிய முன்னாள் இராணுவ வீரர் ஜோ ரொபின்சனை (வயது-25) துருக்கி பொலிஸ் கடந்த வருடம் கைது செய்தது. அதன் பின்னர் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஏழரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த  14 மாத காலமான அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

ஜோ ரொபின்சனுடன் கைதுசெய்யப்பட்ட அவரது காதலியும் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

இந்நிலையில் தமக்கு உதவுமாறு பிரத்தானிய அரசாங்கத்திற்கு ஜோ ரொபின்சன்  உருக்கமாக கடிதமொன்றை எழுதியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகள் துருக்கி அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தண்டனைக் காலத்தின் முதல் 4 மாதங்கள் தன்னை இருட்டறையில் அடைத்து வைத்ததாகவும் 3 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக சூரிய ஒளியைக் காணாது அவதிப்படுவதாகவும் தனது காதலியுடன் உரையாட அனுமதிக்கவில்லையென்றும் ஜோ ரொபின்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் காதலியுடன் விடுமுறையைக் கழிக்க சுற்றுலா சென்றபோது தன்னையும் தனது காதலியையும் கைது செய்ததாக ரொபின்சன் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • ஷமீமா பேகத்திற்கு பிரித்தானிய வாழ்வுரிமை வழங்கப்படலாம்  

    ஐஎஸ் ஜிகாதி அமைப்பில் இணைந்து கொண்ட ஷமீமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்கும் ந

  • ஷமீமா பேகத்தினை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளாது : வெளிவிவகார அமைச்சு  

    ஐஎஸ் மணப்பெண்ணான ஷமீமா பேகம் பங்களாதேஷ் குடியுரிமையைக் கொண்டிருக்காத காரணத்தினால் அவரை பங்களாதேஷ் ஏற

  • கஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை  

    ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ

  • ராக சங்கமம் 2018 – பகுதி 04  

  • ராக சங்கமம் 2018 – பகுதி 03  


#Tags

  • begging
  • Ex-soldier
  • Joe Robinson
  • Turkey
  • Uk
    பிந்திய செய்திகள்
  • மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
    மைத்திரி -மஹிந்த கூட்டணியை இறுதி செய்ய ஆறு பேர் கொண்ட குழு!
  • லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
    லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மார்ச்சில்!
  • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் டிரைலர்
  • இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
    இலங்கை – சீன உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து புதுடெல்லியில் பேச்சு!
  • முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
    முதலீடுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு பகிரங்க அழைப்பு!
  • நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
    நீதிபதிகள் நியமனத்தில் தாமதத்திற்கு காரணம் கொலீஜியம் – தலைமை நீதிபதி
  • அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
    அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை!
  • ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
    ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் வருமானத்தில் 61 மில்லியன் டொலர் இழப்பு!
  • பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
    பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்
  • ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
    ஆசிய அரசியல் கட்சிகளின் செயளாலர் நாயகத்துடன் மஹிந்த பேச்சு!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.