பிரித்தானிய பிரபல உளவு எழுத்தாளர் ஜான் லெ காரே காலமானார்!
In இங்கிலாந்து December 14, 2020 6:48 am GMT 0 Comments 1658 by : Anojkiyan

பிரித்தானியா உளவு எழுத்தாளர் ஜான் லெ காரே, தனது 89ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என அவர் நடத்திவரும் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளரின் குடும்பமும் அவர் நிமோனியாவால் இறந்துவிட்டதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இவருக்கு மனைவி ஜேன் மற்றும் நான்கு மகன்கள் உள்ளனர்.
ஆங்கிலத்தில் உளவு புனைகதைகளில் முதன்மையான எழுத்தாளராக விளங்கிய இவர், உளவாளியாகவும் வேலை பார்த்துள்ளார்.
ஜான் லெ காரே தனது அனுபவத்தைப் புனைகதைகளாக மாற்றுவதற்கு முன் இங்கிலாந்தின் உளவுத்துறையில் பணியாற்றினார்.
உளவாளியாக மாறிய நாவலாசிரியர் பனிப்போர் த்ரில்லர்களை எழுதுவதில் பெயர் பெற்றவர். அவரது நேர்த்தியான மற்றும் சிக்கலான எழுத்து பனிப்போர் உளவு வகையை வரையறுத்தது, இது பெரும்பாலும் விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டது.
டிங்கர், தையல்காரர், சோல்ஜர் ஸ்பை உள்பட் பல்வேறு த்ரில்லர் நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.