பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக இரண்டு இலட்சத்து 498பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை கொவிட்-19 தொற்றினால் 79இலட்சத்து 61ஆயிரத்து 673பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 87ஆயிரத்து 134பேர் பாதிக்கப்பட்டதோடு ஆயிரத்து 455பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு இலட்சத்து 64ஆயிரத்து 244பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 70இலட்சத்து 96ஆயிரத்து 931பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.