பி.சி.ஆர். பரிசோதனைகளில் பங்கேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!
In இலங்கை January 28, 2021 8:40 am GMT 0 Comments 1342 by : Jeyachandran Vithushan

நாடாளுமன்றத்தில் எழுமாற்றாக முன்னெடுக்கப்படவுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளில் பங்கேற்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் வாரத்துக்கு ஒரு முறை பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.