News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • சர்வதேச பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • அத்துமீறிய பௌத்த ஊடுறுவல்களைத் தடுக்க நடவடிக்கை – சுரேன் ராகவன்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  1. முகப்பு
  2. ஆசிரியர் தெரிவு
  3. புதிய பிரதமரை ரணில்  ஏற்றுக்கொண்டமையால் நீதிமன்றம் செல்லவில்லை: டிலான்

புதிய பிரதமரை ரணில்  ஏற்றுக்கொண்டமையால் நீதிமன்றம் செல்லவில்லை: டிலான்

In ஆசிரியர் தெரிவு     November 2, 2018 2:22 am GMT     0 Comments     1434     by : Yuganthini

“அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டிருந்தால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். ஆனால் அவர் அதனை செய்யவில்லையென்றால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றுதானே அர்த்தம்?” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் பிரதமர் ரணில் நீதிமன்றத்துக்கு செல்லாதன் வாயிலாக அவர் மஹிந்தவை பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

மேலும் எந்ததொரு நாட்டிலும் அரசியலமைப்பு பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அரசியலமைப்பில் தெளிவின்மை மற்றும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும். அம்முறையே எமது நாட்டிலும் பின்பற்றப்படுகின்றது.

அந்தவைகையில் ஜனாதிபதி, மஹிந்தவை தனக்கு நம்பிக்கையானவர் என்ற அடிப்படையிலேயே பிரதமராக நியமித்துள்ளார். இந்நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டவை ஆகும்.

ஆனால் ஜனாதிபதியின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானதென ஒருசிலர் விவாதித்து வருகின்றரே ஒழிய, சட்டரீதியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யவில்லை .

மேலும் ரணில் விக்ரமசிங்கவும் ஆங்கில பிரதியை வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கு காட்டிக்கொண்டு இருக்கின்றார். அவரும் நீதிமன்றத்தை  இதுவரை நாடவில்லை” என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்!  

    நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத

  • ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்  

    ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணி

  • மைத்திரிக்கு போட்டியாக வேறொருவரை பஷில் நிறுத்துவார்!- ராவய  

    அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாள

  • இலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து  

    சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு

  • மைத்திரியும், ரணிலும் இணைந்தால் மாத்திரமே அபிவிருத்தி – இராதாகிருஸ்ணன்  

    ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல முட


#Tags

  • Dilan Perera
  • mahindha
  • ranil
  • டிலான்
  • மஹிந்த
  • ரணில்
    பிந்திய செய்திகள்
  • ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
    ஒழுக்காற்றுக் குழுவில் ஆஜராகுமாறு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு!
  • அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
    அல்பேர்ட்டா மாகாணத்தில் புதிதாக 6 நீதிபதிகள் நியமனம்
  • தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
    தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
  • அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
    அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழவேண்டும்!
  • Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
    Vanier ஐ அலங்கரிக்கும் பனிச்சிற்பங்கள்!
  • LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
    LKG திரைப்படத்தின் காணொளி பாடல் வெளியீடு!
  • யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
    யானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி!
  • ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
    ரியோ – கார்த்திக் இணையும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை
  • தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
    தமிழர்களின் மேலதிகப் பங்களிப்பு அவசியம் : முன்னாள் தளபதி
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.