புதிய வகை கொரோனா தொற்றினால் ஜப்பானில் மேலும் நால்வர் பாதிப்பு
In உலகம் January 31, 2021 5:48 am GMT 0 Comments 1259 by : Jeyachandran Vithushan

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றினால் ஜப்பானில் மேலும் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை அங்கு 15 பேரிடம் புதிய வகைக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் தலைநகர் டோக்கியோவில் உள்ள அலுவலகத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே 7 பேருக்குப் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட எவரும் அண்மையில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் புதிய வகை கொரோனா தொற்று, நாடெங்கிலும் பரவவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.